நடுவர் மன்றம் தமிழகத்தில் சுற்றுப்பயணம்
டெல்லி:
காவிரி நடுவர் மன்ற உறுப்பினர்கள் இந்த மாதம் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் காவிர் டெல்டாபகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.
காவிரி நடுவர் மன்ற உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயண் இருவரும், காவிரி பாசனப் பகுதிமாநிலங்களில் நேரடி ஆய்வு நடத்த தேதி முடிவெடுத்தனர். எப்போது சுற்றுப் பயணம் செய்யலாம் என்பதைசம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் காவிரி பாசன மாநிலங்களுக்குஅவர்கள் கடிதம் அனுப்பினர்.
அதன்படி, தமிழக அரசு அவர்களது தமிழக சுற்றுப்பயணத் திட்டத்தைத் தயாரித்து அனுப்பியுள்ளது.
அதில் ஆகஸ்ட் 23ம் தேதி பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும், 24ம் தேதி மேட்டூர்அணையிலும், 25ம் தேதி பிலிகுண்டுலுவிலும் 26ம் தேதி மேல் அணை மற்றும் கல்லணையிலும், 27ம் தேதி சிஎம்பிஆயக்கட்டு பகுதியிலும், 28ம் தேதி காவிரியின் முகப்பு மற்றும் இறுதிப் பகுதிகள், காரைக்கால் காவிரிப்படுகையிலும்,
29ம் தேதி கீழ்அணைக்கட்டு மற்றும் காவிரிப் படுகையிலும் ஆய்வு நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30ம் தேதி அவர்கள் சென்னை வருகின்றனர். அனைத்து இடங்களிலும் விவசாயிகள் மற்றும் விவசாயசங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்க போதிய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications