வழக்கறிஞர் கருப்பனை விடுவித்தது உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னை வழக்கறிஞர்கருப்பன் விடுவிக்கப்பட்டார்.

நீதிபதிகளுக்கு எதிராக பிட் நோட்டீஸ் வெளியிட்டதாக கருப்பன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னைஉயர் நீதிமன்றம் தானாகவே பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கில் கருப்பனுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந் நிலையில் கடந்தவெள்ளிக்கிழமை கருப்பனை போலீஸார் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இவரது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கருப்பன் சிறையில்அடைக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிபதியிடம்தெரிவித்தார்.

கருப்பனிடம் ரூ.10,000க்கு உறுதிமொழிப் பத்திரம் வாங்கிக் கொண்டு உடனடியாக அவரை விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து வேலூர் மத்தியச் சிறையில் இருந்த கருப்பன், வேலூர் கூடுதல் தலைமைநீதித்துறை நடுவர் ராஜகோபால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+