பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்கிறது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துவருவதை அடுத்து, உள்நாட்டிலும்அவற்றின் விலைகளை உயர்த்த பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இது குறித்து பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பெட்ரோல் விலை ஏப்ரல், ஜூலையில் ரூ.2,131.45 ஆக இருந்தது. அது இந்தமாதம் 2,319.45 ஆக அதிகரித்துவிட்டது. பீப்பாய்க்கு ரூ.1,880 ஆக இருந்த டீசல் விலை இப்போது ரூ.2,209 ஆகஉயர்ந்துவிட்டது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுடன் ஒப்பிட்டால் உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின்விலைகளைக் கடுமையாக உயர்த்த வேண்டும்.

ஆனால், இறக்குமதி செய்யப்படும்போது ஆகும் அடக்க விலையின் 10 சதவீத அளவுக்கே விலையைஉயர்த்தலாம் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனால்தான் லிட்டருக்கு ஒரு ரூபாய் மட்டும்அதிகரிக்கப்படுகிறது என்றார்.

இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் இரண்டாவது முறையாக உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+