17ம் தேதி சோனியா சென்னை வருகை
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார்.
வருகிற 17ம் தேதி முரசொலி அலுவலக வளாகத்தில் காலை 9 மணிக்கு முரசொலி மாறன் சிலையை திமுக தலைவர்கருணாநிதி திறந்து வைக்கிறார். இதில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முரசொலி அறக்கட்டளை தலைவர்ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
அன்று மாலை 5 மணிக்கு அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முரசொலி மாறன் நினைவு தபால்தலைவெளியீட்டு விழா நடக்கிறது. விழாவில் சோனியாகாந்தி, மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி , இந்துராம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
முரசொலி மாறனின் உருவப் படம் பொறித்த தபால் தலையை சோனியா வெளியிட, அதை கருணாநிதி பெற்றுக்கொள்கிறார். அதேபோல் சிறப்பு அஞ்சல் உறையை சோம்நாத் சாட்டர்ஜி வெளியிட அதை கருணாநிதி பெற்றுக்கொள்கிறார்.
இத் தகவலை அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கருணாநிதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications