தமிழகம் அமைதிப்பூங்காவா? வாசன் கேள்வி
சென்னை:
கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தினமும் நடக்கும்போது, தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக முடியும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்புக்கு திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரவர் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதில் தவறு இல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிக அளவில் கொலை, கொள்ளைநடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படி இருக்கும்போது தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாகமுடியும்?
நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் அவர்கள் மீது போலீசார்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
வாசன் மாற்றப்பட மாட்டார்: சல்மான் குர்ஷித்
தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.வாசனை மாற்றும் திட்டம் ஏதும் கட்சி மேலிடத்திடம் இல்லைஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான சல்மான் குர்ஷித் கூறினார்.
சென்னை வந்துள்ள சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.வாசன் மத்திய அமைச்சாரகப்போகிறாரா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது. மத்திய அமைச்சர் பதவியை தருவது பிரதமரின்உரிமை என்று என்னிடம் வாசன் கூறியுள்ளார்.
ஒருவேளை வாசன் விரும்பினால் அவருக்குப் பதில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம். இருப்பினும்இப்போதைக்கு கட்சித் தலைமையில் எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டம் கட்சி மேலிடத்தில் இல்லை.
கட்சியை தமிழகத்தில் அடிமட்ட அளவிலிருந்து வலுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications