தமிழகம் அமைதிப்பூங்காவா? வாசன் கேள்வி
சென்னை:
கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தினமும் நடக்கும்போது, தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக முடியும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்புக்கு திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரவர் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதில் தவறு இல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிக அளவில் கொலை, கொள்ளைநடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படி இருக்கும்போது தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாகமுடியும்?
நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் அவர்கள் மீது போலீசார்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
வாசன் மாற்றப்பட மாட்டார்: சல்மான் குர்ஷித்
தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.வாசனை மாற்றும் திட்டம் ஏதும் கட்சி மேலிடத்திடம் இல்லைஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான சல்மான் குர்ஷித் கூறினார்.
சென்னை வந்துள்ள சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.வாசன் மத்திய அமைச்சாரகப்போகிறாரா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது. மத்திய அமைச்சர் பதவியை தருவது பிரதமரின்உரிமை என்று என்னிடம் வாசன் கூறியுள்ளார்.
ஒருவேளை வாசன் விரும்பினால் அவருக்குப் பதில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம். இருப்பினும்இப்போதைக்கு கட்சித் தலைமையில் எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டம் கட்சி மேலிடத்தில் இல்லை.
கட்சியை தமிழகத்தில் அடிமட்ட அளவிலிருந்து வலுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications