மீனவர்களை மீட்க டி.ஆர்.பாலுவிடம் நட்வர்சிங் உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 25 தமிழக மீனவர்கள்விரைவில் மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் மத்திய கப்பல் மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் உறுதி கூறினார்.
கடந்த 4-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் படகுகளுடன் பிடித்துச் சென்றனர்.
இவர்களை உடனடியாக மீட்க, நட்வர்சிங்கைச் சந்தித்து பாலு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திமுகதலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் நட்வர்சிங்கிடம் கொடுத்தார்.
அப்போது நட்வர்சிங், இப் பிரச்சினை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியிருப்பதாகவும்,விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications