தமிழர் விடுதலைப் படை செயலாளர் மீது வெடிகுண்டு வீச்சு
பெரம்பலூர்:
தமிழர் விடுதலைப் படை பொதுச் செயலாளர் வல்லம் அறிவழகன் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தமிழர் விடுதலைப் படை பொதுச் செயலாளரான வல்லம் அறிவழகன், வழக்கு விசாரணை ஒன்றுக்காகஜெயங்கொண்டம் நீதிமன்றத்திற்கு சென்றார். விசாரணை முடிந்து திரும்பும்போது, தேவலூர் என்ற இடத்தில்,முந்திக் காட்டுக்குள் மறைந்திருந்த சிலர் அவர் வந்த வாகனம் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
ஆனால் இந்த குண்டுவீச்சிலிருந்து அறிவழகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிவழகன்கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழர் விடுதலைப் படைக்குப் போட்டியாக பல்வேறு நக்சலைட் பிரிவுகள் பெரம்பலூர் முந்திக் காடுகளில்செயல்பட்டு வருகின்றன. அந்தக் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள்தான் அறிவழகன் மீது குண்டு வீசியிருக்கவேண்டும் என்று போலீஸார் கூறுகிறார்கள்.