கிரிக்கெட்: முரளிதரனுக்கு அறுவை சிகிச்சை
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ளகாயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய இன்று ஆஸ்திரேலியா செல்கிறார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ராய் இலங்கூன் கூறியதாவது:
முரளிதரனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.காயத்தின் தீவிரம் குறித்து இப்போது எதுவும் தெரியாது. அவரை ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் யங் வருகிறசனிக்கிழமை பரிசோதிக்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் வலியுடன்தான் விளையாடினார். மேலும் ரிஸ்க்எடுக்க விரும்பாததால் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடவில்லை.
மருத்துவ ஆலோசனைக்குப் பின், தென் ஆப்பிரிக்காவுடனான 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications