மத்திய அரசின் முன் சேது சமுத்திர திட்டம்: டி.ஆர்.பாலு
டெல்லி:
சேதுசமுத்திர திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்னும் ஒரிரு நாட்களில் மத்திய அரசின்ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலுதெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது.
சேது சமுத்திர திட்டம் சாத்தியமானது தான் என்று தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் கடந்த 20ம்தேதி அறிக்கை அளித்துள்ளது. ரூ 2,000 கோடி செலவில் நான்கு ஆண்டுகளில் இந்த திட்டத்தை விரைந்து முடிக்கசேதுசமுத்திர கழகம் என்னும் அமைப்பு உருவாக்கப்படும்.
இன்னும் ஒரிரு நாட்களில் இந்த திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பான பொது விவாதத்தை தமிழக மாசு கட்டுப்பாட்டுவாரியம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வைத்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தின்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடல் பகுதியை ஆழப்படுத்தும்போது,எடுக்கப்படும் மணல் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் கொட்டப்படும்.
இதனால் 40 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியில் கடல் புகுந்த நிலங்களை திரும்ப பெறலாம். இதனால் 2,500ஏக்கர் பரப்பளவு நிலம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும், துறைமுக கழகங்களும்ஆர்வமாக இருக்கின்றன. இதனால் இந்த திட்டம் நிறைவேறுவதில் பணசிக்கலும் ஏற்படாது என்று கூறினார்.