For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலையான 24 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்களும் நேற்றிரவு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம், நாகப்பட்டனம், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மீனவர்கள் சமீபத்தில் இலங்கை கடற்படை வீரர்களால்கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியவுறவு அமைச்சர் நட்வர்சிங்குக்கு முதல்வர்ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து 24 பேரையும் இலங்கை அரசு விடுவித்துள்ளதாகவும், வெள்ளிக்கிழமை இரவுக்குள் அவர்கள் தமிழகம் திரும்பி விடுவார்கள்என்றும் நட்வர்சிங் கூறியிருந்தார்.

இந் நிலையில் நேற்றிரவு மண்டபம் பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினர் குவிந்தனர். இலங்கை வீரர்களால் கச்சத்தீவு அருகே 24மீனவர்களும், அவர்களது படகுகளுடன் இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் 24 மீனவர்களும் மண்டபம் வந்தடைந்தனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீருடன் கட்டித் தழுவி வரவேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X