அமைச்சரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பொன்னமராவதி:
பொது மக்களிடம் குறை கேட்க வந்த மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் காரை கிராம மக்கள் சூழந்து கொண்டுமுற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ராதாகிருஷ்ணன் பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கிராமங்களில் மக்கள் குறை கேட்க அதிகாரிகளுடன்வந்தார். அமைச்சர் வரும் கிராமங்கள் குறித்து அப் பகுதிகளில் நோட்டீசும் வினியோகிக்கப்பட்டிருந்தது.
இதில் வேந்தன்பட்டி என்ற கிராமத்தின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் வேந்தன்பட்டி கிராம மக்கள் கோபமடைந்தனர். வேந்தன்பட்டிகிராம எல்லையில் திரண்ட பொது மக்கள் அந்தப் பக்கமாக வேறு ஊருக்குச் செல்ல வந்த அமைச்சரின் காரை வழி மறித்தனர்.
காரைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை அதிமுகவினர் தட்டிக் கேட்கவே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
இதனால் அங்கு பதற்றமும் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு கிராம மக்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னரே அமைச்சரின் கார்செல்ல கிராம மக்கள் அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications