சுதந்திர தினம்: தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை:
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனினும், அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் தடுக்க பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றவிருக்கும் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸார்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதிகளில் உள்ள உயரமான கட்டடங்களில் பைனாக்குலார்களுடன் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கடலோரப்பகுதிகளில் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தன்று ஈரோடில்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள அரசு கட்டங்களுக்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல நாடு முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications