For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நியூ" சூர்யா மீது போலீஸில் வழக்கு!

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

Suryaதணிக்கை வாரிய அதிகாரி மீது செல்போனை வீசி ரகளை செய்ததாக நியூ பட இயக்குநர்-நடிகர் சூர்யா மீதுசென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

நியூ படத்தை எடுத்து இயக்கி, நடித்து வெளியிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா அந்தப் படத்தில் கிரணின் நடனம் ஒன்றைசமீபத்தில் சேர்த்தார். இந்தப் பாடலுக்கு அனுமதி வாங்குவதற்காக அதை சென்னையில் உள்ள தனிக்கைவாரியத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் பாடலுக்கு அனுமதி வழங்க சென்னை தணிக்கை வாரியம் மறுத்து விட்டது. இதையடுத்து மும்பையில்உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு தனது பாடலை கொண்டு சென்ற சூர்யாவுக்கு பாடலில் சில வெட்டுக்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கள் செய்த பின்பு பாடலை மீண்டும் சென்னை வாரியத்தில் கொடுத்தபோது மேலும் சில வரிகளை நீக்கக்கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, தணிக்கை வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டதாகவும், செல்போனை தூக்கி அதிகாரிகள் மீது வீசி ரகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதன் பேரில் சூர்யா மீது போலீஸார்,செல்போனை வீசி ரகளை செய்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தரக்குறைவாக பேசுதல்ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து சூர்யா கருத்து தெரிவிக்கையில், நான் ரகளை எதையும் செய்யவில்லை. அவர்களிடம்வாதாட மட்டுமே செய்தேன். மிகுந்த சிரமப்பட்டு அந்தப் பாடலை நான் எடுத்துள்ளேன். ரூ. 25 லட்சம் செலவுசெய்துள்ளேன்.

போலீஸாரிடம் உண்மைகளைச் சொல்லியுள்ளேன். அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர். எனக்கு அந்தப்பாடலுக்கு அனுமதி வேண்டும். இதற்காக தணிக்கை வாரிய மேசை, நாற்காலிகளை துடைக்கச் சொன்னாலும்துடைக்கிறேன் என்றார் சூர்யா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X