ஜெ Vs
சென்னை:
திமுக அரசு கொண்டு வந்த நமக்கு நாமே திட்டம்தான், அதிமுக அரசின் நமது கிராமம் திட்டம் என திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின அறிக்கையில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலானதிட்டங்களை தன்னுடைய ஆட்சியில் அறிவித்தது என்று கூசாமல் பொய் சொல்லி யிருக்கிறார். ஊரார் பிள்ளையைஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழி அவருக்குத் நினைவுக்கு வந்துள்ளது போலும்.
திமுக அரசின் நமக்கு நாமே திட்டம்தான் இப்போது நமது கிராமம் என்று பெயர் மாறியுள்ளது.
சிமெண்ட் முதலாளிகளின் நன்மைக்காக கிராமங்களில் கருணாநிதி சிமெண்ட் சாலைகள் போட்டுள்ளார் என்றுகூறிய ஜெயலலிதா இப்போது சிமெண்ட் சாலை அமைக்கப்படுமென அறிவித்துள்ளார். இதற்கு சிமெண்ட் உற்பத்திசெய்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
கோட்டையின் கட்டுமானப் பகுதிகள் வலுவிழந்த நிலையில் இருப்பதால் ஜெயலலிதா கொடியேற்றும் இடத்தைமாற்றியிருக்கிறார் என்கிறார்கள். ஆளுங்கட்சியின் கட்டுமானம் கூட வலுவிழந்து பல நாட்களாகின்றன.
சேலம் மாநாட்டுக்கு வருபவர்கள் பயணத்தில் எச்சரிக்கையுடன் வர வேண்டும். மாநாட்டுப் பந்தலுக்குள்நுழைவதற்கு நன்கொடைச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.