For Daily Alerts
Just In
ஜாமீன் கோரி முகம்மது அலி மீண்டும் மனு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிஐஜி முகம்மது அலி சென்னை செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் முகம்மது அலி தவிர உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரிராமசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவேஎழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இந் நிலையில் முகம்மது அலி சார்பில் சென்னை முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
Comments