For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடுப்பூசி போட்ட குழந்தைகள் மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே நடந்த தடுப்பூசி முகாமில் மஞ்சள் காமலை தடுப்பூசி போடப்பட்ட பலகுழந்தைகள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கீகாரம் இல்லாமல் தடுப்பூசி முகாம் நடத்திய 7பேரை போலீஸார் கைது செய்தனர்.

காலம் கடந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சிவதாபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் மஞ்சள் காமலை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்தமுகாமை வெங்கடேசன், ரகுமான், பக்ருதீன், அஜய் செளராசியா, சந்திரசேகரன், ரசிதரன் மற்றும் ஒரு பெண்ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தடுப்பூசி போட்டனர். ஆனால், தடுப்பூசிபோட்டுக் கொண்ட பச்சிளம் குழந்தைகள் சில நிமிடங்களில் மயங்கி விழுந்தன. சில குழந்தைகளுக்கு வாந்தியும்,வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.

இதனால் பயந்து போன பெற்றோர்கள், முகாம் நடத்தியவர்களை முற்றுகையிட்டபோது, பயப்படத் தேவையில்லை,சிறிது நேரத்தில் குழந்தைகள் குணமடைந்துவிடுவர் என முகாமைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல குழந்தைகளின் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து 7 பேரையும் கைது செய்தனர். குழந்தைகளை உடனடியாக அரசுமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

முறையான அனுமதி வாங்காமல் இந்த முகாம் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும்,ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ. 50 வசூல் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி எக்ஸ்பயரி தேதி முடிந்ததாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X