தடுப்பூசி போட்ட குழந்தைகள் மயக்கம்
சேலம்:
சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே நடந்த தடுப்பூசி முகாமில் மஞ்சள் காமலை தடுப்பூசி போடப்பட்ட பலகுழந்தைகள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கீகாரம் இல்லாமல் தடுப்பூசி முகாம் நடத்திய 7பேரை போலீஸார் கைது செய்தனர்.
காலம் கடந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சிவதாபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் மஞ்சள் காமலை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்தமுகாமை வெங்கடேசன், ரகுமான், பக்ருதீன், அஜய் செளராசியா, சந்திரசேகரன், ரசிதரன் மற்றும் ஒரு பெண்ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தடுப்பூசி போட்டனர். ஆனால், தடுப்பூசிபோட்டுக் கொண்ட பச்சிளம் குழந்தைகள் சில நிமிடங்களில் மயங்கி விழுந்தன. சில குழந்தைகளுக்கு வாந்தியும்,வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.
இதனால் பயந்து போன பெற்றோர்கள், முகாம் நடத்தியவர்களை முற்றுகையிட்டபோது, பயப்படத் தேவையில்லை,சிறிது நேரத்தில் குழந்தைகள் குணமடைந்துவிடுவர் என முகாமைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் நேரம் செல்லச் செல்ல குழந்தைகளின் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து 7 பேரையும் கைது செய்தனர். குழந்தைகளை உடனடியாக அரசுமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
முறையான அனுமதி வாங்காமல் இந்த முகாம் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும்,ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ. 50 வசூல் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி எக்ஸ்பயரி தேதி முடிந்ததாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications