ஜெயலட்சுமி நாளை வாக்குமூலம்
மதுரை:
பரபரப்புப் பெண்மணி ஜெயலட்சுமி தனது வாக்குமூலத்தை அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் அவகாசம்கொடுத்துள்ளது.
தமிழகத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ள சிவகாசிப் பெண் ஜெயலட்சுமி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில்நேற்று வாக்குமூலம் அளிக்க இருந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.ஏராளமானோர் ஜெயலட்சுமியை வேடிக்கை பார்க்க திரண்டிருந்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி ஜெயலட்சுமி வாக்குமூலம் அளிக்கவில்லை. பிற்பகலில் நீதிபதிகள் பாலசுப்பிரமணியன்,மாசிலாமணி ஆகியோரின் அறையில் ஜெயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சார்பில் வழக்கறிஞர்கள் அழகிரிசாமி, வெங்கடேசன் ஆகியோர் ஆஜரானார்கள்.
இதேபோல, ஜெயலட்சுமி மோசடி செய்துவிட்டதாக புகார் கொடுத்துள்ள போலீசார் முருகவேல், கண்ணன்ஆகியோரும் நீதிபதிகள் முன் ஆஜராகினர்.
அப்போது பேசிய அரசு வழக்கறிஞர் ராஜா, ஜெயலட்சுமியின் வாக்குமூலத்தைப் படித்துப் பார்த்து விட்டு 18ம்தேதி விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்தார். இந் நிலையில் ஜெயலட்சுமியின் தந்தை அனுப்பிய பேக்ஸ் கடிதம்நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில், தன்னை சிவகாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகவும், மதுரைக்கு சென்று மகளுக்கு ஆதரவாகவாக்குமூலம் அளிக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜெயலட்சுமியின் தந்தைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிவகாசிடிஎஸ்பி சரவணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் 18ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஆடம்பரமாய் வாழவே...: ஜெயலட்சுமி












Click it and Unblock the Notifications