வேலை நிறுத்த உரிமை: சட்டத் திருத்தம்
டெல்லி:
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்ததை தடை செய்யும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனைசெய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை லட்சக்கணக்கில் அரசு டிஸ்மிஸ்செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தின்சார்பில் டி.கே. ரங்கராஜன் வழக்குத் தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உரிமை இல்லை என தீர்ப்புவழங்கியது.
இதையடுத்து வேலை நிறுத்தத்தை அடிப்படை உரிமையாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
இந் நிலையில் இன்று மக்களவையில் பேசிய ஊழியர் துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுபரிசீலனையில் உள்ளது. இதற்கு மேல் இதில் பேசுவதற்கு ஏதும்இல்லை. தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும்முயற்சி எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications