தமிழகத்தை வாட்டி எடுக்கும் வெயில்
சென்னை:
தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 5 நகரங்களில் வெயில்தாண்டவமாடுகிறது. அங்கு வெப்பத்தின் அளவு 100 டிகிரியைக் கடந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கூட கோடை வெயிலை விஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் அனல் காற்றுடன் கூடிய வெயில்அடிக்கிறது. குமரி, நெல்லை, கோவை மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்ப நிலைமிகவும் அதிகரித்துள்ளது.
மதுரையில் அதிகபட்சமாக நேற்று 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை-யில் 103 டிகிரியும்,நாகப்பட்டினத்தில் 101 டிகிரியும், வேலூர் மற்றும் கடலூரில் 100 டிகிரியும், திருச்சி, சேலம், பாளையங்கோட்டைஆகிய இடங்களில் 97 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது. பாண்டிச் சேரியில் 103 டிகிரி வெப்பம் நிலவியது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இந்த ஆண்டு மழைப் பொழிவு மிகவும் குறைந்துள்ளதால், செங்குன்றம்,பூண்டி நீர்த் தேக்கங்களும், செங்கற்பட்டு, மதுராந்தகம் ஏரிகளும் நீரின்றி வறண்டு போய் காணப்படுகின்றன.