For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி நடுவர் மன்ற நீதிபதிகள் தமிழகம் வருகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக, கர்நாடக காவிரிப் பாசனப் பகுதிகளில் நடுவர் மன்ற நீதிபதிகள் ஒரு வார காலம் நேரில்ஆய்வு நடத்த உள்ளனர்.

இதற்காக வரும் 23ம் தேதி அவர்கள் தமிழகம் வருகின்றனர். 29ம் தேதி வரை அவர்கள் ஆய்வுசெய்வர்.

இந்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகம் 205டி.எம்.சி. நீரைத் தர வேண்டும். ஆனால், தீர்ப்பை கர்நாடகம் மதித்ததே இல்லை. இந் நிலையில்விரைவில் தனது இறுதித் தீர்ப்பையும் வழங்க நடுவர் மன்றம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக நடுவர் மன்ற நீதிபதி என்.பி. சிங்கின் உத்தரவின்பேரில், மன்றத்தின் உறுப்பினர்களாகஉள்ள நீதிபதிகள் என்.எஸ்.ராவ், சுதீர் நாராயணன் ஆகியோர் தமிழக காவிரிப் பாசன பகுதிகளைபார்வையிட வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் மட்டம், மழையளவு, பாசன வசதிகள்,பயிர்களின் நிலை ஆகியவை குறித்து நேரில் ஆய்வு நடத்துவதோடு, இரு மாநிலஅதிகாரிகளுடனும் நடுவர் மன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தமிழக சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு அடுத்த மாதம் கர்நாடகத்தில் இக் குழு ஆய்வுநடத்துகிறது. பெங்களூருக்கு காவிரியில் இருந்து குடிநீர் வழங்கப்படுவது குறித்தும் நீதிபதிகள்ஆய்வு செய்வர்.

இந்த நீதிபதிகளின் அறிக்கையை வைத்து நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வெளியிடவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X