இன்று குருப்பெயர்ச்சி: ஆலங்குடியில் விழா
ஆலங்குடி:
இன்றிரவு (வியாழக்கிழமை) 11.04 மணிக்கு குருப் பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டம்ஆலங்குடியில் உள்ள குரு பகவான் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. வழக்கமாகஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடக்கும்.
இந்த ஆண்டு வியாழக்கிழமையன்றே (இன்று) குருப் பெயர்ச்சியும் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியே குருபகவானாக அவதாரம் எடுத்து இந்தத் திருத்தலத்தில் அருள் பாலிப்பதாக ஐதீகம்.
இன்று இரவு 11.04 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசியில் பிரவேசம் செய்கிறார். இந்தகுருப் பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனைகள் நடந்து வருகின்றனர். இத் திருக் கோவிலின் பிரசாதத்தை தபால்மூலம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிர்வாக அதிகாரி,
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்,
ஆலங்குடி,
திருவாரூர் மாவட்டம்
என்ற முகவரிக்கு ரூ. 100யை மணியார்டர் செய்து, அதனுடன் உங்களது பெயர், நட்சத்திரம், ராசி குறித்தவிவரங்களையும் அனுப்பி வைத்தால், பூஜைகள் செய்யப்பட்டு தபால் மூலமே உங்களது முகவரிக்கு பிரசாதம்அனுப்பி வைக்கப்படும்.
குரு பகவானை நேரில் வந்து தரிசனம் செய்ய விரும்புவோர், கொண்டைக் கடலை மாலை, மஞ்சள் துண்டைசாமிக்கு சாற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
இன்று குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இந்தத் திருத்தலத்துக்கு வருகை தர உள்ளதால்,அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் நகர்களில் இருந்து சிறப்புப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் மன்னார்குடி செல்லும் வழியில் அமைந்திருக்கிறதுஆலங்குடி.












Click it and Unblock the Notifications