For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக வழக்கை தள்ளுபடி செய்ய தீதன் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மலைச்சாமி, பி.ஜி.நாராயணன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குக்குதள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு கணக்குத் தணிக்கை அதிகாரி தீதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழக அரசு தொடர்பான கணக்குத் தணிக்கை அறிக்கையை தீதன் பத்திரிகைகளுக்கு வெளியிட்டதுவிதிமுறைகளை மீறிய செயல் என்றும், அவர் பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை என்றும் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்க தீதனுக்கு உயர்நீதிமன்றம் ஒருவாரத்துக்குத் தடை விதித்தது.

இந் நிலையில் தீதன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் தவறான முறையிலோ, சட்ட விரோதமாகவோ இந்தப் பதவியை அடையவில்லை. எனவே எனக்கு எதிராகத்தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கணக்கு தணிக்கை அறிக்கையை பத்திரிகைகளுக்கு நான் வெளியிட்டது தவறு என்றும், அதற்கு எனக்கு அதிகாரம்இல்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். கணக்குத் தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபிறகு அந்த அறிக்கையின் முக்கிய விபரங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இந்தியக்கணக்குத் தணிக்கை அதிகாரி எனக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார்.

ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில கணக்குத் தணிக்கை அதிகாரிகள் பத்திரிகையாளர்கூட்டத்தை நடத்தியுள்ளனர். எனவே இது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்றுதான்.

ஜூலை 31-ம் தேதி நான் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்ததாக கூறியிருப்பது தவறு. கடந்த 2-ம் தேதிதான்பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தேன். நான் சொன்ன தகவல்கள் சில பத்திரிகைகளில் தவறாகபிரசுரிக்கப்பட்டுள்ளன.

அதிமுகவினர் தங்கள் மனுவில் தவறான சொற்களால் என்னை விமர்சித்துள்ளனர். அச்சொற்களை அந்த மனுவில்இருந்து நீக்க வேண்டும். மேலும் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீதன் கூறியுள்ளார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X