இந்தியாவில் வக்கிரம்: தான்சானியாவில் பதுங்கல்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இந்தியாவில் சிறுவர்களுடன் தகாத ஓரினச் சேர்க்கை கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு,தேடப்பட்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த முதியவர் தான்சானியாவில் பதுங்கி இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டங்கன் கிராண்ட் என்ற அந்த 61 வயது நபர் பிரிட்டன் கடற்படையில் பணியாற்றியவர்.மும்பையில் தெருச் சிறார்களுக்காக இல்லங்கள் நடத்துவதாகக் கூறி பல சிறுவர்களுடன் தகாதபாலியல் உறவு கொண்டார். தனது வக்கிரத்துக்கு அடி பணியாத குழந்தைகளை அடித்தும்,உதைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

அவருடன் ஆலன் வாட்டர்ஸ் என்ற நபரும் இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இரு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மீது சில சிறுவர்கள் போலீசாரிடம் புகார் தந்ததனர். இதையடுத்துபோலீசார் இவர்களைத் தேடிச் சென்றபோது இருவரும் காணாமல் போயிருந்தனர். நாடு முழுவதும்தேடுதல் வேட்டை நடத்தியும் இவர்கள் சிக்கவில்லை.

அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியது தெரியவந்ததையடுத்து அவர்களைக் கைது செய்ய சர்வதேசஅளவில் இன்டர்போல் மூலம், இந்தியா ரெட் அலர்ட் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து நியூயார்க் ஜே.எப்.கே விமான நிலையத்தில் வைத்து ஆலன் வாட்டர்ஸ் கைதுசெய்யப்பட்டார். ஆனால் கிராண்ட் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந் நிலையில், அவர் இப்போது தான்சானியா தலைநகர் தார்எஸ்சலாமில் பதுங்கியிருப்பதுதெரியவந்துள்ளது. தெருச் சிறார்களின் நலனுக்காக பாடுபடும் பிரிட்டிஷ் சமூக நல அமைப்புக்குநிதி திரட்டும் வேலையில் அவர் அங்கு ஈடுபட்டுள்ளார்.

அவரைக் கைது செய்ய தான்சானிய போலீசாரின் உதவியை இந்தியா நாடும் என்று தெரிகிறது.

இதறிகிடையே அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட வாட்டர்ஸை இந்தியாவுக்குக் கொண்டு வரமும்பை போலீஸ் படை அடுத்த வாரம் நியூயார்க் செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+