மைத்ரேயனுக்கு பதவி: டெல்லி பிரதிநிதியானார்
சென்னை:
டெல்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பியானமைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1999ம் ஆண்டில் பாஜக- அதிமுக கூட்டணி உடைந்தபோது, பா.ஜ.கவில் இருந்த மைத்ரேயன்அதிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரை அதிமுக ராஜ்யசபாஎம்பியாக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
அந்தப் பதவிக் காலம் முடிந்த பின் போயஸ் தோட்டத்தின் கண்டுகொள்ளப்படாதோர் லிஸ்டில்சேர்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்.
ஆனாலும், முதல்வரின் பார்வையில் எப்படியாவது விழுந்துவிடுவதில் கில்லாடியான மைத்ரேயன்தினமும் சும்மாவாவது கோட்டைக்கும், சட்டசபைக்கும் வந்து சென்ற வண்ணம் இருந்தார்.
ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. சமீபத்திய மக்களைவைத் தேர்தலிலாவது சீட்கிடைக்கும் என எதிர்பார்த்துத் தோற்றார்.
இந் நிலையில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக உள்ள பி.பி.ராஜனின் பதவிக் காலம் முடிந்தது.ஆனால், அவருக்கு பதவி நீட்டிப்பு தரப்படாமல் அது காலியாகவே வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் முதல்வரை சந்தித்து அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் மைத்ரேயன். ஓராண்டு காலம்மைத்ரேயன் இந்தப் பதவியில் இருப்பார்.












Click it and Unblock the Notifications