நதி நீர் பிரச்சனை: மன்மோகன், சோனியா கவலை
டெல்லி:
நதி நீர் பிரச்சனைகளை மாநிலங்கள் பேச்சு நடத்தி, சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்என பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ராஜிவின் 60வது பிறந்த தினம் மற்றும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்துவிவாதிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காரிய கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.
நாடு முழுவதும் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ள இக் கூட்டத்தில் பேசியசோனியா காந்தி,
நதி நீர் பிரச்சனைகளின்போது நாட்டின் நலனை மனதில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனது நலனை பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. அதேநேரத்தில் தேச நலனையும் மறந்துவிட முடியாது. பிரச்சனையை பேசி சுமூகமாகத் தீர்ப்பதே சிறந்தது.
நதி நீர்ப் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் கவலை தருகிறது. நீரை அனைத்துத்தரப்பினரும் நேர்மையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நமது புண்ணிய நதிகளின் நீரை வைத்து மக்களைப்பிரிப்பதை அனுமதிக்க முடியாது. நீர் தான் இந்த நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாக இருக்கப்போகிறது. அதை உரிய முறையில் நிர்வகிக்க வேண்டும் என்றார்.
காவிரி விவகாரம் ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் ஹரியாணா மற்றும் டெல்லியுடன் செய்துகொண்ட நீர் பகிர்வு ஒப்பந்தத்தை பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங் ஒருதலைப்பட்சமாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
அவரது செயலை கண்டிக்கும் வகையிலேயே இன்று சோனியா பேசியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications