For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2வது நாளை எட்டியது லாரிகள் வேலை நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் உள்பட நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று இரண்டாவதுநாளை எட்டியுள்ளது.

லாரிப் போக்குவரத்து மீது சேவை வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நேற்று முதல் இந்தப் போராட்டம்நடக்கிறது. தமிழகத்தில் இந்தப் போராட்டத்தால் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏதும்ஏற்படவில்லை.

போராட்டத்தில் தமிழக லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் பங்கேற்கவில்லை. இதனால்பெரும்பாலான லாரிகள் இயங்குகின்றன. அதே நேரத்தில் வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகள்நிறுத்தப்பட்டுவிட்டன.

அதே போல வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் லாரிகளும் நின்றுவிட்டன.

பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் லாரிஉரிமையாளர்கள் சங்கத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன.

போராட்டம் மேலும் சில நாட்கள் நீடிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்டபொருள்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை கோயம்பேடு மற்றும்தமிழகத்தின் முக்கியமான சந்தைகளில் அதிக அளவில் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல்செய்துவிட்டனர்.

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான லாரிகள் இயங்குவதால் வழக்கம் போல் காய்கறிகள் வந்துகொண்டுள்ளன. இதனால் போட்டி போட்டுக் கொண்டு அதிகளவில் காய்கறிகளை இறக்கிவைத்துவிட்ட வியாபாரிகள் இப்போது அவற்றை அழுகும் முன் விற்றுவிடும் போட்டியில்ஈடுபட்டுள்ளனர்.

இதனால் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X