Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. சொத்து வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒருவாரத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்துக்கு அனுப்புமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவையும் அவரது தோழி சசிகலாவையும்சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அப்போது தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட முறையை மிகக் கடுமையாகவிமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரியவா, சேமா ஆகியோர், இந்த சொத்துக் குவிப்பு வழக்கைமீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர்.

மேலும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் இந்த வழக்கு நியாயமான முறையில் நடைபெறவாய்ப்பில்லை என்று கூறி, அதை பெங்களூருக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். ஆனால், இன்னும்இந்த வழக்கு விசாரனை தொடங்கவேயில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசுவழங்காமல் இழுத்தடிப்பதால் தான் விசாரணை தாமதப்படுவதாக அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில்இன்னொரு மனு தாக்கல் செய்தார்.

அதனை இன்று விசாரித்த அதே நீதிபதிகளான வரியவா, சேமா ஆகியோர், ஒரு வாரத்துக்குள்ஜெயலலிதா வழக்குத் தொடர்பான ஆவணஙகள் பெங்களூர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டாகவேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரி சென்னைக்குச் சென்று,ஜெயலலிதாவின் வழக்கு ஆவணங்களை சேகரித்துக் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழக,கர்நாடக அரசுகள் உரிய பாதுகாப்பு தந்து ஆவணங்களை பெங்களூருக்கு பத்திரமாகக் கொண்டு வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கும் பணிகளில் முந்தைய காங்கிரஸ் முதல்வர் கிருஷ்ணாஅவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் நீதிமன்றம் அமைக்கும் பணிகள் மெதுவாகவேநடந்தன. இன்னும் கூட நீதிமன்றத்தை எங்கு அமைப்பது என்று இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதே போல வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களும்அறிவிக்கப்படவில்லை.

இந் நிலையில் காவிரி, வீரப்பன் விவகாரத்தால் தமிழக-கர்நாடக உறவுகள் சீர்குலைந்துஇருப்பதாகவும் வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவின்சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் தமிழில் இருந்ததால்அவற்றை கன்னடம், ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கும் பணி தொடங்கியது.

ஆனால், ஆவணங்களை தமிழக அரசு பெங்களூருக்கு அனுப்ப மறுத்ததால் அந்தப் பணியும்தடைபட்டுவிட்டது.

இந் நிலையில் தான் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒரு வாரத்துக்குள்பெங்களூருக்கு அனுப்பியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+