அரியலூர்: 6 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
அரியலூரில் 6 வயதே ஆன சிறுமி மானபங்கப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டாள். அவளதுபிணம் கோவிலுக்குள் கிடந்தது.
அரியலூரைச் சேர்ந்த சேகர், வெண்ணிலா தம்பதியின் மகள் விஜயலட்சுமி. 6 வதான இச் சிறுமி 1ம்வகுப்பு படித்து வந்தாள். வீட்டிலிருந்து அருகே உள்ள கடைக்குச் சென்ற சிறுமி காணாமல்போனாள்.
இந் நிலையில் அப் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் பிரகாரத்தில் விஜயலட்சுமியின் பிணம்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அலங்கோலமான நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டுகிடந்தாள்.
மானபங்கப்படுத்தப்பட்டு, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தாள். பட்டப்பகலில் இச் சம்பவம் நடந்துள்ளது.
அவளைக் கொலை செய்த காமக் கொடூரன் யார் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications