ஜெ. வெளிநாட்டுப் பயணம்: ஆற்காடு சந்தேகம்
சேலம்:
முதல்வர் ஜெயலலிதா வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள பண விவரங்களை சரிபார்க்கவே லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
சேலம் திமுக மாநாட்டில் பேசிய கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி,
உடல் நிலையைக் காரணம் காட்டியும், சிகிச்சைக்காகவும் முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்லத்திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது. ஆனால், அவர் வெளிநாடு போவது சிகிச்சைக்காக அல்ல.
ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது கோடிகோடியாய் கொள்ளையடித்து அமெரிக்கா, இங்கிலாந்து,சிங்கப்பூர் என பல நாடுகளின் வங்கிகளிலும் முடக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா.
அந்தப் பணத்தை வரவு-செலவு பார்க்கவே வெளிநாடு செல்லத் திட்டமிடுகிறார். இதற்கு சாக்காகத்தான் மருத்துவ சிகிச்சையை சொல்கிறார்கள். மேலும் வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்குவிசாரணை விரைவில் கர்நாடக நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
அதிலிருந்து தப்பும் வகையில் வெளிநாட்டில் போய் 5,6 மாதம் தங்கிவிட ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார். அவரது வெளிநாட்டுப் பயண முயற்சியை திமுக மத்திய அமைச்சர்கள் தடுக்கவேண்டும் என்றார்.
முதுகு வலி வலி மற்றும் கால் மூட்டு வலி காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலலிதாதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அனுமதி கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர்கடிதம் எழுதவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லண்டனில் அவரது தங்கல், சிகிச்சைக்கான உதவிகளைச் செய்ய ஹிந்துஜா சகோதரர்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications