மதுக்கடை மூடும் போராட்டம்: ராமதாஸ் கைது
சென்னை:
அரசு மதுக் கடைளைப் பூட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசும்நூற்றுக்கணக்கான பெண்களும் கைது செய்யப்பட்டார்.
மதுக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை பா.ம.க.நடத்தி வருகிறது. இந் நிலையில் கடைகளை மூடி பூட்டு போடும் போராட்டத்தில் இன்று அக் கட்சிஇறங்கியது.
திண்டிவனத்தில் இன்று நூற்றுக்கணக்கான மகளிரணித் தொண்டர்கள் தொடர, கையில் பூட்டுடன்ஊர்வலமாக அரசு மதுக் கடையை நோக்கி வந்தார் ராமதாஸ். அவர்களை வழியிலேயே தடுத்தபோலீசார், இந்தப் போராட்டத்துக்கு அனுமதி இல்லை, திரும்பிச் செல்லுங்கள் என்றனர்.
ஆனால், போலீசாரையும் மீறி கடையை நோக்கிச் சென்ற ராமதாஸையும், சுமார் 300 பாமகமகளிரணித் தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கருணாநிதி கோரிக்கை:
கைது செய்யப்பட்ட பா.ம.க நிறுவனர் ராமதாஸையும் அக் கட்சியின் தொண்டர்களையும்உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications