பாஜகவுக்கு எதிராக போராட்டம்: கருணாநிதி
சென்னை:
நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பா.ஜ.க. தொடர்ந்து பிரச்சனை ஏற்படுத்தி வருமானால், அந்தக் கட்சிக்குஎதிராக திமுக போராட்டத்தில் இறங்கும் என கருணாநிதி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், சேலத்தில் நடந்த திமுக மாநாடு மாபெரும் வெற்றியடைந்துள்ளது. பொடாசட்டத்தை ஆதரிக்கும் முதல்வர் ஜெயலலிதா அதை மற்ற மாநில முதல்வர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கடிதம்எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை.
உமா பாரதி அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துக் கொண்டு தினந்தோறும் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பா.ஜ.க. தடுத்து வருகிறது. இதனால் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க முடியவில்லை.
தேர்தல் தோல்வியில் ஏற்பட்ட அரிப்பு பா.ஜ.கவுக்கு இன்னும் அடங்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க. இது போலசெயல்பட்டால், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி நாடு தழுவிய அளவில்போராட்டம் நடத்தப்படும்.
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications