லாரி ஸ்டிரைக்: சமாளிக்க 300 சரக்கு ரயில்கள்
சென்னை & டெல்லி:
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தைஇன்றும் 5வது நாளாகத் தொடர்கின்றனர்.
லாரி சர்வீசுக்கு சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து நடக்கும் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுமத்திய நிதியமைச்சகம் எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
இன்று 5வது நாளாக தொடரும் போராட்டத்தால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அத்தியாவசிப் பொருள்களின் சப்ளை பாதிக்கப்படாமல் தடுக்க நாடு முழுவதும் கூடுதலாக 300சரக்கு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இப்போது இயங்கும் சரக்குரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஈரோட்டில் மஞ்சள் பெருமளவில் தேங்கிக் கிடக்கிறது. அதே போல கோவை,திருப்பூரில் ஜவுளிகளும் தேக்கமடைந்துள்ளன.
இது குறித்து சென்னை தொழில் வர்த்தக சபையின் தலைவர் முரளி வெங்கட்ராமன் கூறுகையில்,
இந்தப் போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சி எடுக்க வேண்டும். போராட்டம்தொடருமானால் தமிழக தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றார்.
இதற்கிடையே லாரிகள் இயங்காததால் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு பெரும் நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகவும், லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் நாங்களும் பங்குகளை மூடிபோராட்டத்தில் குதிப்போம் எனவும் பெட்ரால் பங்கு உரிமையாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications