For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். சிறைகளில் வாடும் 1,454 இந்தியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

54 போர்க் கைதிகள் மற்றும், பாகிஸ்தான் சிறைகளில் 1,400 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகநாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்தது.

லோக்சபாவில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங்,

1971-72ம் ஆண்டு போரின்போது பிடிபட்ட 54 இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் சிறைகளில் தொடர்ந்துஅடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இவர்களைத் தவிர 938 இந்தியர்களும், 412 இந்திய மீனவர்களும் பாகிஸ்தான் சிறைகளில் அடைபட்டுள்ளதாகத்தெரிகிறது. 2002ம் ஆண்டு முதல் இதுவரை 35 பாகிஸ்தானியர்களையும் 93 பாகிஸ்தானிய மீனவர்களையும்இந்தியா விடுவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் 38 இந்தியர்கள், 2 இந்திய ராணுவத்தினர், 623 இந்திய மீனவர்களை பாகிஸ்தான்விடுவித்துள்ளது. இந்தியச் சிறைகளில் 100 பாகிஸ்தானியர்கள் பல்வேறு வழக்குகள் காரணமாகஅடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X