சரணடைந்தார் உமா பாரதி: சிறையில் அடைப்பு
ஹூப்ளி:
மதக் கலவர வழக்கில் ஹூப்ளி நீதிமன்றத்தில் சரணடைந்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பெல்காம் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதை எதிர்த்து நாளை கர்நாடகத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் பந்த் நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை ரயில் மூலம் ஹூப்ளி வந்த உமா பாரதியை வரவேற்க ஆயிரக்கணக்கான பா.ஜ.கவினர் குவிந்தனர்.இதனால் அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலில் அவர் ஹூப்ளி வந்தவுடன் கைது செய்வோம் என்று அறிவித்திருந்த கர்நாடக போலீசார், அவரைஅலநவர் ரயில் நிலையத்தின் அருகே ரயிலில் வைத்தே கைது செய்ய முயன்றனர்.
ஆனால், தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும், ஹூப்ளி நீதிமன்றத்தில் தானாகவே சரணடைவதாகவும் அவர்கூறியதையடுத்து கைது நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர். மேலும் ஹூப்ளியில் வைத்தும் அவரைக் கைதுசெய்யப் போவதில்லை என அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து உமா பாரதி தானாகவே நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் ஜாமீன் கோருகிறீர்களா என நீதிபதிகேட்டார். இல்லை என உமா பாரதி பதிலளித்தார்.
இதையடுத்து அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக ரயிலில் வரும் வழியெல்லாம் முக்கிய ரயில் நிலையங்களில் பாஜகவினர் மத்தியில் உமா பாரதிஉரையாற்றினார்.
தனக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சதி செய்வதாகவும், பொது இடத்தில் தேசியக் கொடியைஏற்றுவது தவறு என்றால் அதற்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என்றும் கூறினார்.
ஹூப்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன் தடையுத்தரவையும் மீறி ஈத்கா மைதானத்தில் உமா பாரதி கொடிஏற்றியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில் பலர் பலியாயினர்.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு பல முறை சம்மன் அனுப்பியும் உமா பாரதி ஆஜராகவில்லை. இதையடுத்துஅவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டு ரயிலில் ஹூப்ளி வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார் உமா பாரதி.
அவரை ஹூப்ளி துணைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அங்கு அவருக்கு உரியபாதுகாப்பும், வசதிகளும் இருக்காது என்பதால் பெல்காம் சிறைக்குக் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள்











Click it and Unblock the Notifications