கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி வரும் 30ம் தேதி கூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலயத்தில் 30ம் தேதி காலை 10 மணிக்கு ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடக்கும்என்று கூறியுள்ளார்.
தமிழக அரசின் மீது இந்தக் கூட்டணிக் கட்சிகள் தந்த புகார்கள் மீது கவர்னர் ராம்மோகன் ராவ் நடவடிக்கை ஏதும் எடுக்காதததால் அவர்மீது திமுக கடும் அதிருப்தியில் உள்ளது.
இதையடுத்து அவருக்கு எதிராக காய் நகர்த்துவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி பேசுவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே கவர்னர் பதவிக்கு ஷர்மா என்பவரின் பெயரை திமுகவின் பரிசீலனைக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இவர் முன்னாள்சிபிஐ இயக்குனராவார். அது குறித்து கூட்டணிக் கட்சியினருடன் கருணாநிதி ஆலோசிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications