தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்
சென்னை:
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. பொள்ளாச்சி ஜெயராமனும்விஜயலட்சுமி பழனிச்சாமியும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல பல அமைச்சர்களின் இலாக்காக்களையும் அவர் மாற்றம் செய்துள்ளார்.
ஜெயராமனுக்கு உணவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி பழனிச்சாமிக்கு சமூக நலத்துறையும்ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை உணவுத் துறை நிதியமைச்சர் பொன்னையனின் வசம் இருந்து வந்தது. அதே போல மின்துறைஅமைச்சராக ஜெயக்குமார் இருந்து வந்தார். இப்போது ஜெயக்குமாருக்கு சட்டத்துறை மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளை ஆளுநர் மாளிகையில் நடக்கிறது. ஏதென்ஸ் ஒலிம்பிக் பார்ப்பதற்காககிரீஸ் சென்றிருந்த ஆளுநர் ராம்மோகன் ராவ் ஊர் திரும்பியதையடுத்து இந்த அமைச்சரவை மாற்றத்தை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விரைவில் ராம்மோகன் ராவின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படும் சூழலில் அமைச்சரவை மாற்றத்துக்கு புதியஆளுநரிடம் இருந்து எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தெரியாததால், இந்த மாற்றத்தை அவசரமாகமுதல்வர் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அடுத்த சில வாரங்களில் ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதால், ராம்மோகன் ராவின்பதவிக் காலத்திலேயே அமைச்சரவை மாற்றத்தை செய்துவிட முடிவு செய்ததாகத் தெரிகிறது.
தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது இது 16வது முறையாகும்.
புதிய அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயராமன், முதல்வர் ஜெயலலிதா இரணடாவது முறையாக ஆட்சிஅமைத்தபோது அமைச்சராகப் பதவியேற்று 18 நாட்களில் பதவி இழந்தவராவார்.
இன்னொரு அமைச்சராக பதவியேற்கவுள்ள விஜயலட்சுமி பழனிச்சாமி, பனைமரத்துப்பட்டி சட்டமன்றஉறுப்பினராவார்.












Click it and Unblock the Notifications