For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 அமைச்சர்களின் தலைகளும் உருளலாம் !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில் 4 அமைச்சர்களின் தலையும் விரைவில் உருளலாம் என்று கூறப்படுகிறது.

Jayalakshmiஜெயலட்சுமியுடன் போலீஸ் அதிகாரிகள் தவிர, தொழிலதிபர்கள் மற்றும் கோட்டையில் உள்ள சில முக்கியபிரமுகர்களும் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பி.ஏவான காஜா மொய்தீனுக்கும் தனக்கும் தொடர்பு இருந்ததாக தனது முதல்வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார். இவர் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த நிலக்கோட்டைசப்-இன்ஸ்பெக்டர் ஷாகஜானின் மைத்துனர் ஆவார்.

இந்த இருவரும் சேர்ந்து தன்னை மும்பை விபச்சார விடுதியில் விற்க முயன்றதாகவும் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

காஜா மொய்தீனைத் தவிர பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பி.ஏவான ராமச்சந்திரன,போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதத்தின் உதவியாளரான முத்து மாணிக்கம் ஆகியோருக்கும்ஜெயலட்சுமியுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து இந்த மூன்று பிஏக்களையும் தமிழக அரசு நேற்றிரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கானஉண்மையான காரணத்தை அரசு வெளியிடாவிட்டாலும், கடுமையான புகார்களின் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த மூவரின் உதவியாலும் கோட்டையில் படு செல்வாக்காக வலம் வந்துள்ளார் ஜெயலட்சுமி. பல போலீஸ்அதிகாரிகளுக்கும் டிரான்ஸ்பர், போஸ்டிங் ஆகிய காரியங்களை சாதித்துத் தந்திருக்கிறார்.

கோட்டைக்கு பலமுறை போலீஸ் டிரஸ்சிலேயே போய் வந்துள்ளார் ஜெயலட்சுமி என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X