4 அமைச்சர்களின் தலைகளும் உருளலாம் !
சென்னை:
ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில் 4 அமைச்சர்களின் தலையும் விரைவில் உருளலாம் என்று கூறப்படுகிறது.
ஜெயலட்சுமியுடன் போலீஸ் அதிகாரிகள் தவிர, தொழிலதிபர்கள் மற்றும் கோட்டையில் உள்ள சில முக்கியபிரமுகர்களும் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பி.ஏவான காஜா மொய்தீனுக்கும் தனக்கும் தொடர்பு இருந்ததாக தனது முதல்வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார். இவர் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த நிலக்கோட்டைசப்-இன்ஸ்பெக்டர் ஷாகஜானின் மைத்துனர் ஆவார்.
இந்த இருவரும் சேர்ந்து தன்னை மும்பை விபச்சார விடுதியில் விற்க முயன்றதாகவும் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
காஜா மொய்தீனைத் தவிர பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பி.ஏவான ராமச்சந்திரன,போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதத்தின் உதவியாளரான முத்து மாணிக்கம் ஆகியோருக்கும்ஜெயலட்சுமியுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இந்த மூன்று பிஏக்களையும் தமிழக அரசு நேற்றிரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கானஉண்மையான காரணத்தை அரசு வெளியிடாவிட்டாலும், கடுமையான புகார்களின் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த மூவரின் உதவியாலும் கோட்டையில் படு செல்வாக்காக வலம் வந்துள்ளார் ஜெயலட்சுமி. பல போலீஸ்அதிகாரிகளுக்கும் டிரான்ஸ்பர், போஸ்டிங் ஆகிய காரியங்களை சாதித்துத் தந்திருக்கிறார்.
கோட்டைக்கு பலமுறை போலீஸ் டிரஸ்சிலேயே போய் வந்துள்ளார் ஜெயலட்சுமி என்கிறார்கள்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications