நாளை ஜெயலட்சுமி 2ம் வாக்குமூலம்!
மதுரை:
மதுரை சொக்கிகுளத்தில் பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலட்சுமி நாளை தனது இரண்டாவதுவாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
முதல் வாக்குமூலத்தில் 21 போலீசார், அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுடனான தனது தொடர்பைவிளக்கியிருந்தார் ஜெயலட்சுமி.
அதில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்களின் உத்தரவின்பேரில் ஜெயலட்சுமியின் சேலைகளைத் துவைத்து போட்டுஏட்டையா, கார் ஓட்டிய காவல்துறையினர், பாதுகாப்புக்குப் போன போலீசார், காய்கறி வாங்கி வந்த காக்கிச்சட்டைகள், எடுபிடி வேலை பார்த்த ஹெட் கான்ஸ்டபிள்கள் ஆகியோரின் விவரங்களை வெளியிட்டிருந்தார்.
மேலும் தன்னை அடைவதற்காக அடித்து, உருண்ட இரு இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள், அமைச்சர் தளவாய்சுந்தரத்தின் பி.ஏ. காஜா மொய்தீன் ஆகியோரின் பெயர்களையும் கூறியிருந்தார்.
இந் நிலையில் இரண்டாவது வாக்குமூலத்தை ஜெயலட்சுமி தாக்கல் செய்ய உள்ளார். அதில் மேலும் சுமார் 10போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், கோட்டை வட்டார பிரமுகர்கள் ஆகியோரின் பெயர்களையும்ஜெயலட்சுமி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
தன்னைப் பயன்படுத்தி தொழிலதிபர்களிடம் பணம் பறித்த காக்கிச் சட்டைகள், தன்னை விருந்தாக்கிஅரசியல்வாதிகளிடம் காரியம் சாதித்த அதிகாரிகள், தனக்கு வளைந்து கொடுத்த அரசியல்வாதிகளின்பெயர்களையும் அவர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் இந்த லிஸ்டில் தங்களது பெயர்கள் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பல தகிடுதித்தவேலைகளில் பல போலீஸ் அதிகாரிகளும், சில தொழிலதிபர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது பெயரை வெளியில் சொல்லிவிட வேண்டாம் என்ற கெஞ்சலோடு, ஜெயலட்சுமியுடன் மத்தியஸ்தர்கள்மூலம் பண பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த பேரங்கள் படிந்தால் வாக்குமூலத்தில் இவர்களது பெயர்களை ஜெயலட்சுமி விட்டுவிடக் கூடும் என்றும்கூறுகின்றனர்.
நாளை நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் தாக்கல் செய்யவுள்ள நிலையில், அவருடன் தொடர்புவைத்திருந்தவர்கள், வயிற்றில் ஏராளமான அமில சுரப்போடு, மிரண்டு போய் திரிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications