இன்ஸ்பெக்டரின் தற்கொலை முயற்சி
திருச்சி:
ஜெயலட்சுமியுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுதற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அதே போல ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட கரூர்இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமறைவாகிவிட்டார்.
இப்போது அரியலூரில் மதுவிலக்குப் பிரிவில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சுந்தரவடிவேலு முன்புஅரவக்குறிச்சியில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது சுந்தரவடிவேலுக்கு அறிமுகமாகியுள்ளார்ஜெயலட்சுமி.
இதையடுத்து ஜெயலட்சுமியை கரூரில் இருந்த தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சுந்தரவடிவேலு, அங்கு வைத்துஜெயலட்சுமியுடன் செக்ஸ் உறவு கொண்டுள்ளார்.
போலீஸ் ஜீப்பிலேயே அடிக்கடி வீட்க்கு அழைத்துச் சென்று என்னை அடித்து, உதைத்து உறவு வைத்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர் என்று தனது வாக்குமூலத்தில் போட்டு உடைத்தார் ஜெயலட்சுமி.
இதனால் மானம் போன சுந்தரவடிவேலு சயனைடைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். நண்பர் ஒருவர் உரியநேரத்தில் தலையிட்டு இந்த முயற்சியைத் தடுத்துள்ளார்.
இதற்கிடையே சுந்தரவடிவேலு கூறுகையில, ஜெயலட்சுமி என் குடும்பத்தில் ஒருவராகத் தான் பழகினார். ஒருநாளும் நான் அவரை கட்டிலுக்கு அழைத்ததில்லை என்றார்.
தலைமறைவு இன்ஸ்பெக்டர்:
ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட கரூர் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மாயமாகியுள்ளார். அவர்எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஜெயலட்சுமி தனது பெயரையும் வாக்குமூலத்தில் சொன்னதால் மானத்தை இழந்துள்ள விஸ்வநாதன்,நிருபர்களிடம் இருந்து தப்பிக்கவே தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஜெயலட்சுமி விவகாரத்தில் சஸ்பெண்ட்செய்யப்பட்ட ஷாஜகானின் மனைவி ரம்ஜான்பேகம் நிருபரிடம் பேசுகையில்,
ஆம்வே மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உறுப்பினராகச் சொல்லித் தான் எங்கள் வீட்டுக்குள் ஜெயலட்சுமிவந்தார். பின்னர் குடும்பத்தில் ஒருத்தி போல நடித்தார், பழகினார். அதை நம்பி பணத்தைத் தந்துவிட்டு பின்னர்அதைத் திருப்பிக் கேட்டோம்.
ஆனால், பணத்தைத் திருப்பித் தராத ஜெயலட்சுமி அந்தக் கோபத்தில் என் கணவரையும் தன்னையும் இணைத்துகதை விட்டுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications