முகம்மது அலியின் சிறைக் காவல் நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரின் சிறைக் காவலும் செப்டம்பர் 10ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ. 30,000 போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முகம்மது அலி, உதவி காவல் ஆணையர் சங்கர், மதுரை எல்.ஐ.சி அதிகாரி ராமசாமிசாது ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது சிறைக்காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதிஅருள்தாஸ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களது சிறைக் காவலை நீட்டிக்க கம்மது அலியின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சிபிஐ சார்பில்ஆஜரான வழக்கறிஞர் ராதா, சிபிஐ சிஐடி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் முகம்மது அலி கைது செய்யப்பட்டார்.
மேலும், அப்துல் கரீம் தெல்கியிடம் மறு விசாரணை நடத்தப்பட்டபோது, அலிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்து தெளிவாககூறியுள்ளார் என்றார்.
இதையடுத்து 3 பேரின் சிறைக் காவலையும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications