மதிமுக அவை தலைவர் எல். கணேசனுக்கு பிடிவாரண்ட்
வேலூர்:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் மதிமுக அவைத் தலைவரும், மக்களவைஉறுப்பினருமான எல்.கணேசனுக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
கடந்த 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் எல். கணேசன்,மாநில மதிமுக மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன், தர்மபுரி மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த மாத்தையன் ஆகியோர்ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அரசு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.
வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயா தாயன்பன், மாத்தையன் ஆகியோர் ஆஜராகினர். எல். கணேசன் வரவில்லை.அதைத் தொடர்ந்து கணேசனுக்கு, நீதிபதி மாலா பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ம் தேதிக்குஒத்திவைத்தார்.
இதே வழக்கில் எல். கணேசனுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி ஒரு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து சில தினங்களில்அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பிடிவாரண்டை தளர்த்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications