தேக்கு மரக் கடத்தலில் அமைச்சர் ஓ.பியின் தம்பி!!
தேனி:
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க முயன்றவனத்துறை அதிகாரியும் இரு வனக் காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் டீக் கடை நடத்திக் கொண்டிருந்தபோது, கூடவே ஒத்தாசையாக கடையை கவனித்து வந்தவர் ராஜா.இப்போது அண்ணனுடன் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
இந் நிலையில் பெரியகுளம் சரக வன அதிகாரி ராஜேந்திரன் மற்றும் 2 வனக் காவலர்கள் சமீபத்தில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி இவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் தாங்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட அமைச்சர் பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜாதான் என்று ராஜேந்திரன் பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராஜேந்திரன் கூறுகையில், அமைச்சர் பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்.மஞ்சளாறு அணைப் பகுதியில் நன்கு வளர்ந்த 4 தேக்கு மரங்கள் கடத்தப்பட்டதன் பின்னணியில் ராஜாதான் உள்ளார்.
இதை நான் கண்டுபிடித்த காரணத்தால்தான் என்னைப் பணியிலிருந்து நீக்கியுள்ளனர். மேலும், ராஜாவுக்கு உதவியாக வனக் காவலர்கள்செல்வநாயகம், முனியப்பன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதை நான்தான் கண்டுபிடித்து மாவட்ட வன அதிகாரிக்குத் தகவல்கொடுத்தேன்.
ஆனால் அவர்களை மட்டும் பதவி நீக்கம் செய்யாமல் என்னையும் சேர்த்து வேண்டும் என்றே பணி நீக்கம் செய்துள்ளனர். இதற்குராஜாதான் காரணம். எனது பதவி நீக்கத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications