For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸார் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஜெயலட்சுமி விவகாரத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை சிவகாசி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் ஜெயலட்சுமி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் 21 காவல்துறை அதிகாரிகளின் பெயரைக்குறிப்பிட்டு அவர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்தினார்.

இந் நிலையில் இன்று அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜரானார்.

அப்போது ஜெயலட்சுமியால் செக்ஸ் தொடர்பு லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ள தலைமைக் காவலர் கண்ணனின் வழக்கறிஞர் வாதாடுகையில்,

காவல் துறையினரை மிரட்டும் விதத்தில் ஜெயலட்சுமி நடந்து கொள்கிறார். அவர் இரண்டாவதாக வாக்குமூலம் அளிக்கத்திட்டமிட்டுள்ளார். அது சரியல்ல என்றார்.

இதற்கு ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகிசாமி ஆட்சேபம் தெரிவித்துப் பேசுகையில், இரண்ாடாவது வாக்குமூலம் அளிக்கும் திட்டம்ஜெயலட்சுமியிடம் இல்லை என்றார்.

அப்போது அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு, ஜெயலட்சுமி கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில், நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகான், மதுரை திடீர் நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர் முருகவேல்ஆகியோர் சிவகாசி போலீசாரால் கைது செய்யபப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் ஷாஜகானும் இளங்கோவனும் ஏற்கனவே சஸ்பெண்ட செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X