கடவுள்கள் தான் உதவ வேண்டும்: ராமகோபாலன்
திருச்சி:
கட்டாய மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்த உதவுமாறு கோவில் கோவிலாக சென்று கடவுள்களிடம் கோரிக்கை வைக்கும் போராட்டம் நடத்திவருகிறார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் தமிழக அரசு கட்டாய மத மாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது. இதைக் கண்டித்து ராமகோபாலன் போராட்டங்கள் நடத்தி வருகிறார். அரசே கட்டாய மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி விட்டதால்,கடவுள்களிடம் சென்று உதவி கேட்கும் போராட்டத்தை அவர் நடத்தி வருகிறார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 1,600 கோவில்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் ராம கோபாலன். ஒவ்வொரு கோவிலாகசென்று அங்குள்ள கடவுள்களிடம், மத மாற்றத்தை நீங்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதோடு பக்தர்களிடமும்இது குறித்து விளக்கம் தருகிறார்.
திருச்சியில் உள்ள சாலை விநாயகர் கோவிலுக்கு வந்த ராம கோபாலன், பக்தர்கள் குழுமி நிற்க, உரத்த குரலில் கோரிக்கை வைத்தார். மற்றமதத்தினருக்கு வெளி நாட்டிலிருந்து உதவி கிடைக்கிறது. இந்துக்களுக்கு நீதான் துணை. எனவே கட்டாய மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தநீதான் உதவ வேண்டும் என்று உரக்கச் சொல்லி பிரார்த்தனை செய்தார் ராம கோபாலன்.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடம், மத மாற்றத்துக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும், தனது பெட்ரோல் செலவுக்குஉதவுமாறும் கோரினார். இதையடுத்து சில பக்தர்கள் அவருக்கு நிதியளித்தனர்.












Click it and Unblock the Notifications