சென்னையில் மேலும் ஒரு பெண் படுகொலை
கும்பகோணம்:
சென்னை நகரில் பெண்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன் நர்ஸ் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டார். இந் நிலையில் மேலும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புறநகரான குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவரது மனைவி சாவித்திரி. நேற்று காலை மோகன்வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் சாவித்திரியும், மோகனின் 82 வயது தாயாரும் மட்டும் இருந்துனர்.
மாலை 5 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பினார் மோகன். அப்போது தனது மனைவி சாவித்திரி கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார். சாவித்திரி கொலை செய்யப்பட்டிருந்தது மோகனின் தாயாருக்குக் கூட தெரியாமல்நடந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக குரோம்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து மோகனின் தாயார்ராமலட்சுமியிடம் விசாரித்தனர். அவரது தகவலின்படி மாலை 3 மணியளவில் சாவித்திரியின் உறவுக்கார பையன்கள் இருவர்(இருவருக்கும் 15 வயதுக்குள் இருக்கும்) வீட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற சாவித்திரி சாப்பாடு போட்டுள்ளார். பின்னர் இருவரும் சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்துவெளியேறியுள்ளனர். இடைப்பட்ட நேரத்தில் நடந்தது குறித்து ராமலட்சுமிக்குத் தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக சென்னையிலும், சென்னைப் புறநகரிலும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துவருகிறது. கடந்த 3 மாதங்களில் மொத்தம் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சென்னை பெண்களிடையே பதற்றம்ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications