எஸ்.டி.டி. கட்டணம் அதிரடி குறைப்பு
டெல்லி:
சாதாரண தொலைபேசிக்கான எஸ்.டி.டி., கட்டணத்தை 33 சதவீதமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைந்துள்ளது.அதேபோல் செல்போன்களுக்கான ப்ரி பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டத்திற்கான கட்டணத்தை 60 சதவீதம்குறைத்துள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எஸ். நிறுவனத்தின் தலைவர் சின்கா பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
செல்போன்களுக்கான ப்ரி பெய்டு திட்டத்தில்,
செல்-டூ-செல் பேச நிமிடத்திற்கு ரூ.2.20 ஆக வசூலிக்கப்படும் கட்டணம் இனி 90 பைசாவாக குறைக்கப்படுகிறது.செல்-டூ-செல் எஸ்.டி.டி. கட்டணம் ரூ.2.40 லிருந்து ரூ.2 ஆக குறைக்கப்படுகிறது. செல்போனில் இருந்து சாதாரணதொலைபேசிக்கு உள்ளூர் அழைப்பில் பேச வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 2.40 லிருந்து ரூ.1.20 ஆககுறைக்கப்படுகிறது.
செல்போனில் இருந்து சாதாரண தொலைபேசிக்கு எஸ்.டி.டி. பேசுவதற்கான கட்டணம் தற்போது, 500 கி.மீ.வரையிலான தொலைவுக்கு நிமிடத்திற்கு ரூ.2.40ம், 500 கி.மீ.க்கு மேலான தூரத்திற்கு நிமிடத்திற்கு ரூ.3.60ம்வசூலிக்கப்படுகிறது. இனி இவை இரண்டிற்கும் ஒரே கட்டணமாக நிமிடத்திற்கு ரூ.2.40 மட்டுமே வசூலிக்கப்படும்.
போஸ்ட் பெய்டு திட்டத்தில்,
செல்-டூ-செல் பேச நிமிடத்திற்கு ரூ.1.40 ஆக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இனி 80 பைசாவாககுறைக்கப்படுகிறது.
ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் உள்ள சாதாரண தொலைபேசிக்கு செல்போன் மூலம்பேசுவதற்கான எஸ்.டி.டி. கட்டணம் 200 கிலோ மீட்டர் வரை நிமிடத்திற்கு ரூ.1.80ம், 200 கிலோ மீட்டருக்கு மேல்பேசுவதற்கான கட்டணம் ரூ.2.40ம் வசூலிக்கப்படும்.
அதேபோல் சாதாரண தொலைபேசிக்கான எஸ்.டி.டி. கட்டணம் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஒரேமாநிலத்திற்குள் 100 கி. மீட்டருக்கு மேல் பேச வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.1.80லிருந்து நிமிடத்திற்கு ரூ.1.20 ஆககுறைக்கபடுகிறது. 200 கிலோ மீட்டருக்கு மேலான தொலைபேசி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.3.60லிருந்துரூ.2.40 ஆக குறைக்கப்படுகிறது. இந்த கட்டணக் குறைப்பு அடுத்த மாதம் 10ம் தேதியில் இருந்து அமலுக்குவருகிறது என்றார்.