சென்னையில் திடீர் மழை; மக்கள் மகிழ்ச்சி
சென்னை:
சென்னை நகரில் கடந்த 10 நாட்களாக நிலவி வந்த கடுமையான வெயிலைக் குறைக்கும் விதமாக இன்றுஅதிகாலை பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
சென்னை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத வகையில் ஆவணி மாதத்தில் கடுமையான வெயில் நிலவிவந்தது. இதனால் சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அக்னி நட்சத்திரம் தகிக்கும் சித்திரை மாதத்தில் கூட இந்த அளவுக்கு வெயில் இல்லாத நிலையில் கடந்த 10நாட்களாக தொடர்ந்து 40 டிகிரிக்கு மேலேயே வெயில் இருந்து வந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந் நிலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் கொட்டிய இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த திடீர் கன மழையால் வெயில் கொடுமை சட்டென இறங்கி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications