ஆளுநருடன் ஜெ. திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை, முதல்வர் ஜெயலலிதா திடீரென்று சந்தித்துப் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 2 நாட்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக 2 அமைச்சர்கள்பொறுப்பேற்றனர். இந் நிலையில், ஜெயலலிதா திடீரென்று ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.
அங்கு ஆளுநர் ராம்மோகன் ராவை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார். இவர்களதுசந்திப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது மரியாதைநிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, ஆளுநரை திடீரென்று சந்தித்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில்மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஜெயலலிதா வெளிநாடு செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், இதுதொடர்பாகஆளுநருடன் ஆலோசிக்கவே அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.