ஜெயலட்சுமியின் தந்தை நாளை வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiகாவல்துறையைக் கலங்கடித்து வரும் ஜெயலட்சுமி வழக்கில் அவரது அப்பா நாளை வாக்குமூலம் தாக்கல்செய்கிறார்.

ஜெயலட்சுமி கடந்த 23ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வாக்கு மூலம் தாக்கல் செய்தார்.

அதில் தன் வாழ்க்கையை சீரழித்த 22 போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 3 போலீஸ் அதிகாரிகளும், 3 அமைச்சர்களின் உதவியாளர்களும் பணி நீக்கம்செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டுகண்ணன், கோவை நகைக் கடை அதிபர் முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27ம் தேதி நீதிமன்றத்தில் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியும் ஆஜரானார். ஆனால் வாக்குமூலம்எதையும் தாக்கல் செய்யவில்லை. வாக்குமூலம் தயாரிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதனைஏற்ற நீதிபதிகள் வழக்கை 30ம் தேதிக்குத் (நாளை) தள்ளி வைத்தனர்.

அழகிரிசாமியின் வழக்கறிஞர் மோகன்தாஸ் வாக்குமூலம் தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.இந்த வாக்குமூலத்தில் ஜெயலட்சுமியை தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்த போலீசார் குறித்தும்ஜெயலட்சுமியிடம் தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+