எதிர்க் கட்சிகள் மீதான அவதூறு வழக்கு வாபஸ் இல்லை
சென்னை:
காவிரி டெல்டா விவசாயிகள் எலிக்கறி தின்பதாகக் கூறிய திமுக தலைவர் கருணாநிதி உள்பட எதிர்க் கட்சியினர்மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை வாபஸ் பெற மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரியில் தண்ணீர் வராததால் எலிக்கறி தின்னும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியகருணாநிதி, மத்திய அமைச்சர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் இந்து, தினகரன்ஆகிய பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது தமிழக அரசு.
இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை மட்டுமே வாபஸ் பெற அரசு உத்தரவிட்டுள்ளது.அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படாது என்றார்.
இதையடுத்து விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications